இந்தியாவில் தற்போது நாள்தோறும் சாலை விபத்துகள் அதிகரித்தே வருகின்றன. இதற்காக இந்திய அரசு பல கடுமையான சட்டங்களை செய்து வருகின்றன. ஆனாலும் சில தவிர்க்க முடியதாக விபத்துகள் நேர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் போக்குவரத்து காவலர்கள் நாள்தோறும் ஹெல்மெட் போட கூறுகிறார்கள். அதை மீறும் பட்சத்தில் அதிகமான பைன் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில், மும்பை-புனே விரைவுச் சாலையில் இன்று பிற்பகல் 1.15 மணியளவில் கிட்டத்தட்ட 11 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பெரும் விபத்து நிகழ்ந்தது. இதில் குறைந்தது ஏழு முதல் எட்டு பேர் வரை காயமடைந்துள்ளனர் என இந்த விபத்து அறிந்த போலீசார் வந்து விசாரித்து கூறியுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களை கோப்லி ருக்னாலயா மற்றும் எம்ஜிஎம் மருத்துவமனை காமோத்தேவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளி வந்துள்ளன.
மேலும், இந்த கோர விபத்தால் மும்பை நோக்கிச் செல்லும் சாலையில் சுமார் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசால் உதவியுடன் தற்போது வாகனங்கள் சீராக செல்கிறது.