இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், வாங்கும் தங்கம் நம் எதிர்கால வாழ்க்கைக்காகவும், பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளில் அணிவதற்காகவும், வியாபார நோக்கில் தங்கம் சேர்ப்பது நமது வழக்கமாகும்.அப்படிப்பட்ட தங்கத்தின் விலை நாள்தோறும் பல்வேறு காரணங்களால் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து பல உலக நாடுகள் தங்களது முதலீடுகளை தங்கத்தில் சேர்ப்பதால் இந்த விலை ஏற்றம் என நிபுணர் கணிக்கின்றனர்.
அதன்படி, இன்று சென்னையில் விற்கும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 அதிகரித்துள்ளதால்.45,136ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ.5.642 ஆக விற்பனை செய்கின்றனர். மேலும், வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.80.20க்கு விற்பனையாகிறதால் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 80,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.