இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவை (36) பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக் காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்களுக்கு கடந்த 2010ஆம் ஆண்டு பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்போது இஷான் என்ற மகன் உள்ளார். ஆனால் இந்த தம்பதிகள் கடந்த ஒருவருடமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களது ரசிகர்கள் இருவருக்கும் விவாகரத்து செய்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதை சோயிப் மாலிக்கின் உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக் ரம்ஜான் முன்னிட்டு கராச்சியில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் கலந்து கொண்டார். அதில் அவர் கூறியது ” நான் ரம்ஜானை எனது மனைவி மற்றும் மகனுடன் கொண்டாட விரும்பினேன், ஆனால் வெளியூரில் இருக்கிறார்கள்” என்றார். மேலும், அவர் நானும், சானியாவும் சர்வதேச விளையாட்டுடன் எப்போதும் தொடர்பு கொண்டு இருப்போம் என்றும், எங்கள் பிரிவினை குறித்து வரும் கருத்துக்கள் ஆதாரம் இல்லாதவை என தெரிவித்துள்ளார்.