பஞ்சாப்பில் உள்ள சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் மூத்த அரசியல் தலைவரும், 5 முறை முதல்வராகவும் பதவி வகித்து வந்தார் தான் பிரகாஷ் சிங் பாதல் (95). இந்நிலையில், இவருக்கு வயதின் மூப்பு காரணமாக சில உடல்நல குறைவு அடிக்கடி ஏற்பட்டு வந்தது. அதிலிலும், சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அங்கு உள்ள மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். ஆனால் சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்காததால் நேற்று இரவு காலமானார். இந்த தகவல் அறிந்து நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். இந்நிலையில், பிரதமர் மோடி அவர்கள் நேரிலே வந்து பிரகாஷ் சிங் பாதல் அவர்களின் உடலுக்கு தனது இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மேலும், இவரது மறைவுக்கு நாடு முழுவதும் 2 நாள் துக்க அனுசரிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது