சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக போலீஸ்க்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படியில் இன்று தண்டேவாடா மாவட்டத்தில் அரன்பூர் அருகே கண்காணிப்பதிற்காக போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென நக்சல்களால் ஏற்படுத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலால் 10 போலீஸ் மற்றும் 1 ஓட்டுநர் உட்பட 11 பேர் சம்பவயிடத்திலேயே தங்களது உயிரை இழந்துள்ளனர். இதற்கு அம்மாநில முதல்வர் பூபேஷ் பாதல் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சத்தீஸ்கரில் உள்ள பாதுகாப்புபடையினர் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது கண்டனத்தை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் இறந்த பாதுகாப்பு படையினரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்ளவதாகவும், மறைந்த வீரர்களின் தியாகம் என்றென்றும் போற்றப்படும் என்றும் கூறினார்.