உலகத்தில் தற்போது உள்ள சூழலில் பல நாடுகள் போர் புரிந்து வருகின்றன. அதற்கு எடுத்துக்காட்டாக உக்ரைன் மற்றும் ரஷ்யா ஏற்பட்ட போர் உலக நாடுகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தற்போது வட ஆப்ரிக்க நாடான சூடானில் உள்ள அந்நாட்டு ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே மோதல் ஏற்பட்டது.
அந்நாட்டில் தற்போது மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும், சூடானின் தலைநகர் கர்துாம் உட்பட பல இடங்களில் வன்முறை வெடித்ததே இதற்கு காரணம். இதனால் அங்கு வாழும் அயல் நாட்டினரை பத்திரமாக மீட்க பல நாடுகள் முயன்று வருகின்றது. அந்த வகையில், நம் இந்தியாவில் ‘ஆப்பரேஷன் காவிரி’ என்ற திட்டத்தின் மூலம் 278 இந்தியர்களை ஐ.என்.எஸ் கப்பல் வாயிலாக மீட்கப்பட்டனர் தகவல் வெளிவந்துள்ளது.