பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2க்கான ட்ரைலர் வெளியீட்டு விழா கடந்த மாதம் 29ஆம் தேதியில் நடைபெற்றது . அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளார். மேலும், நடிகை ஷோபனா, குஷ்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் வருகை புரிந்தனர்.
அப்போது மேடையில் பேசிய நடிகை ஷோபனா அவர்கள் கூறியது “நான் தமிழில் முதல்முறையாக ஹீரோயினாக கமலுடன் சேர்ந்து எனக்குள் ஒருவன் என்ற படத்தில் அறிமுகமானேன் என்றும்,அப்போது தமிழ்நாட்டில் என்னை யாருக்கும் பெருசா தெரியாது, ஆனால் ரஜினியுடன் நடித்த தளபதி படத்திற்கு பிறகு தான் மக்களுக்கு தெரிந்தது என்றும், கமலுடன் அறிமுகமான முதல் நடித்தது யாருக்குமே தெரிந்ததில்லை என வேடிக்கையாக கூறினார்.
அது இப்போது பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாவதற்கு 2 நாள் மட்டுமே உள்ள நிலையில், தற்போது ஷோபனா பேசிய விடியோவை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.