இந்தியாவில் மிக பெரிய பணக்காரராக திகழ்பவர் தான் முகேஷ் அம்பானி. இவர் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரீடெயிலின் இயக்குநராக இருந்து வருகிறார். இந்த ரிலையன்ஸ் ஜியோ நம் நாட்டில் ஒரு மதிப்புமிக்க நிறுவனமாகும். இதன்மூலம், பல கோடிக்கணக்கான ஒப்பந்தங்களை வெற்றியாக்கிய பெருமைக்குரியவர் ஆவர். இந்நிலையில், முகேஷ் அம்பானியுடன் நீண்டகாலமாக வலதுகை போல் பணிபுரிபவர் தான் மனோஜ் மோடி.
இந்த மனோஜ் மோடி தனக்கு மிகவும் விசுவாசமாக இருப்பதை கண்டு அவருக்கு முகேஷ் அம்பானி அவர்கள் ஒரு விலை உயர்ந்த கட்டிடம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இந்த கட்டிடம் மும்பையில் உள்ள நிபியான் கடல் சாலை பகுதியில் அமைந்திருக்கும் 22 மாடி கொண்ட பிருந்தாவன் என்ற பெயரிடப்பட்ட கட்டிடம் இருக்கிறது. இதன் விலை சுமார் ரூ.1,500 கோடி மதிப்பானது. அதை அம்பானியால் மனோஜ் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.