தமிழகத்தில் இனி அரசின் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு கட்டாயம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பரிசோதனை செய்யப்படும் என்றும், அதில் தோல்வி அடைந்தால் அவர்களுக்கு வேறு அரசு பணி வழங்கப்படும் என தமிழக அரசு சற்று முன் அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த பரிசோதனையில் ஓட்டுனர்களுக்கு கண், காது உள்ளிட்ட பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இனி அரசு ஓட்டுனர்களுக்கு குறிப்பிட்ட வயதான 50 கீழ் என்றால் அவர்கள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசோதிக்கலாம் அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் ஆண்டுக்கு ஒருமுறை இந்த பரிசோதனை செய்யப்படுவர் என அரசாணையில் குறிப்பிட்டுள்ளனர்.அப்படி நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் ஓட்டுநரின் உடல் நிலை வாகனம் ஓட்டத் தகுதியான நிலையில் இல்லை என்ற மருத்துவர் சான்று அளித்தால் அவருக்கு வேறு பணி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறினர்.
ஏனென்றால், ஓட்டுனர்களுக்கு திடீரென உடல்நிலை கோளாறுகளால் ஏற்படும் விபத்துகளை தவிர்ப்பத்திற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.