தமிழ் சினிமாவில் முதலில் துணைநடிகராக களமிறங்கிய விஜய்சேதுபதி பின்னர் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவரின் கடும் முயற்சிலேயே தற்போது உச்ச நடிகராக வலம் வருகிறார். மேலும், இவர் எப்போதும் ஹீரோ போல் பந்தா பண்ணாமல் எல்லோரிடமும் சகஜமாக பேசக்கூடியவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவருக்கு யாரும் படக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகவும், எல்லோருக்கும் ஓடிப்போடி உதவக்கூடிய நல்ல மனிதர் என்கிறார்.
இந்நிலையில், பிரபல நடிகராக இருந்த ராஜேஷ் அவர்கள் ஒரு பேட்டியில் நடிகர் விஜய்சேதுபதி குறித்து பேசியுள்ளார். அதில் விஜய்சேதுபதியை முதலில் பார்க்கும் போது ஒரு ஃபேக்கான மனிதர் என்று நின்னைத்தாகவும் பின்னர் அவருடன் பழகும் போது தான் அவரின் உண்மையான குணமே தெரிய வந்தது என்று கூறினார். மேலும், அவர் ஒரு வள்ளல், நல்ல உள்ளம் சினிமாவில் யாரும் இல்லை என விஜய் சேதுபதியை புகழ்ந்துள்ளார்.