தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகவே நம் உடலை சூட்டிலிருந்து தனித்து எப்போது குளுமையாக வைக்க வேண்டும். அதற்கு நாம் அன்றாட உணவில் தயிர் அல்லது மோர் சேர்த்து சாப்பிட்டு இருப்போம். இந்த இரண்டில் எதை சாப்பிட்டால் சூட்டு தணியும் என்பதை நாம் அறியலாம் வாங்க.
பொதுவாக கோடை காலத்தில் நாம் அதிகமாக காரமான உணவுகளை தவிர்ப்போம். ஏனென்றால், அது சாப்பிட்ட பின் நம் உடலில் வியர்வையை அதிகரிப்பதே காரணம். அதனால் தான் நிறைய பேர் குளிர்ந்தே அதிகம் இந்த கோடை காலத்தில் உட்கொள்கிறார்கள். இப்போது தயிர், மோர் ஆகிய இரண்டுமே பாலின் இருந்து வந்தவை ஆகும், இது உடம்புக்கு நன்மையே பயக்கும். ஆனால் மோரில் சில கால்சியம், வைட்டமின் பி12, ஜிங்க், ரிபோஃப்ளேவின் மற்றும் புரோட்டீன்கள் இருப்பதால் உடலின் எலும்புகள் வலுப்பெறும், கொலஸ்ட்ராலை குறைக்கும்.
அதைபோல் தயிரில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி12, வைட்டமின் பி5, வைட்டமின் பி2, பொட்டாசியம் மற்றும் புரோட்டீன்கள் போன்றவை இருப்பதால் செரிமான பிரச்சனை நீங்கும். அதன்படி நம் எடுத்துக்கொள்ளும் மோர், தயிர் இரண்டுமே குளிர்ச்சியானது தான். ஆனால் தயிரை விட மோர் நீண்ட நேரம் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.