கடந்த 2010 ஆம் ஆண்டில் கோவை காந்திபுரம் வழியாக சென்று வந்த மேட்டுப்பாளையம், உதகை அரசு மற்றும் தனியார் பேருந்துகளால் நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சாய்பாபா கோவில் அருகே புதிய பேருந்து கட்டப்பட்டு இருந்தது. இந்த வழியாக செல்வதால் பயண நேரம் குறைவதோடு புதிய கட்டணம் அமல்படுத்த வேண்டும் என முன்னாள் கோவை மாவட்ட ஆட்சியினர் உத்தரவிட்டு இருந்தனர்.
ஆனால். இந்த கட்டண குறைப்பை எதிர்த்து தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அது கடந்த பிப்ரவரி 3-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த பேருந்துகள் தற்போது வரை கட்டணத்தை குறைக்காமல் இருந்து வந்துள்ளனர்.
அவை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் வரை பயணிக்க ரூ.20 பெறுவதற்கு பதில், ரூ.22 வசூலித்த இரண்டு அரசுப் பேருந்துகள், காந்திபுரம் – மேட்டுப்பாளையம் இடையே ரூ.23 பெறுவதற்கு பதில் ரூ.25 வசூலித்த 2 தனியார், 4 அரசுப் பேருந்துகள், ரூ.23-க்கு பதில் ரூ.30 வசூலித்த ஒரு அரசுப் பேருந்து என மொத்தம் 9 பேருந்துகளுக்கு போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்தனர்.