Thursday, April 18, 2024 10:55 am

சத்தீஸ்கரில் நடந்த குண்டுவெடிப்பில் 11 பேர் பலியான சோகம்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சத்தீஸ்கர் மாநிலத்தில் தன்டேவாடா என்ற இடத்தில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல்கள் வந்துள்ளது. இதன் காரணமாக , அப்பகுதியில் காவலர்கள் தங்களது ரோந்து பணியை மேற்கொண்டு வந்தனர். அப்போது திடீரென காவல் வாகனத்தில் வெடிகுண்டை குறி வைத்து வீசியுள்ளனர். அந்த குண்டுவெடிப்பு சம்பவம் பாஸ்டர் என்ற இடத்தில் நேர்ந்துள்ளது.

இந்த காவல் வாகனத்தில் பயணித்த 10 போலீசார், ஒரு ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இதுகுறித்து விசாரணையில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது மாவோயிஸ்ட் தான் முதற்கட்டமாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் வாழும் மக்கள் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அங்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதால் அம்மாநில அரசு பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது.

மேலும், இந்த குண்டுவெடிப்பில் இறந்த 11 பேரின் குடும்பங்களுக்கு அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் அவர்கள் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். பின்னர் அவர் இந்த தாக்குதலுக்கு கட்டாயம் பதிலடி கொடுக்கப்படும் என கூறியுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்