தற்போது சர்வதேச அளவில் உள்ள பல்வேறு நாடுகள் மிக மோசமான பொருளாதாரத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், ஐரோப்பியா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் மக்கள் சராசரி வாங்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை கைப்பற்றிய பிரிட்டன் தற்போது பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருகிறது என்றும், கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உணவு பொருட்களின் விலை 11.1 %ஆக உயர்ந்து வருகிறது.
இந்த உணவு பொருட்களின் விலை உயர்வால் அங்கு வாழும் மக்களுக்கு விலை குறைவானவற்றையே வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். அதிலிலும், குறிப்பாக அழுகும் நிலையில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளே வாங்க போட்டி போட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.மேலும், சிலி நாட்டில் கடந்த மதம் ஏற்பட்ட பறவை காய்ச்சலால் 10 லட்சத்திற்கும் அதிகமான கோழிகள் அழிக்கப்பட்டதால் அங்கு முட்டையின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக அங்கு 1 முட்டை விலை இந்திய மதிப்பில் ரூ. 21,294க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறிகின்றனர். மேலும், விலைவாசி ஏற்றத்தால் அங்கு வாழும் மக்கள் செல்போன், இணையதளம் மூலம் பணம் ஈட்டவே ஆர்வம் காட்டுகின்றனர்.