Monday, April 22, 2024 7:07 pm

சூர்யாவை தொடர்ந்து அஜித் வீட்டுக்கு படையெடுத்த மற்றொரு பிரபலம் ! வைரலாகும் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் அஜித் குமாரின் தந்தை பி சுப்பிரமணியம் மார்ச் 24 அன்று காலமானார். நடிகரின் தந்தை 84 வயதில் இயற்கை எய்தினார். நேற்று அஜீத் மற்றும் அவரது சகோதரர் அனில் குமார் ஆகியோர் இறுதிச் சடங்குகளை செய்தனர்.

PS சுப்ரமணியத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அஜித்தின் வீட்டிற்கு கார்த்தியும் சூர்யாவும் சென்ற மார்ச் 27 திங்கட்கிழமையன்று நெட்டிசன்கள் ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர். ஈசிஆரில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு நடிகர்கள் செல்வது வீடியோவில் உள்ளது.

மேலும், நடிகர்கள் கமல், விக்ரம், சிம்பு, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் அஜித்தின் தந்தை மறைவுக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினர்.

கோலிவுட்டின் முன்னணி நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியன் 24ம் தேதி அதிகாலை காலமானார். பக்கவாத பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த சுப்ரமணியன் கடந்த 4 ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அஜித்தின் தந்தை உயிரிழந்த சில மணி நேரங்களிலேயே அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதனையறிந்த நடிகர் விஜய், அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினார்.

மேலும், நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம், சிம்பு, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் அஜித்தின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சூர்யாவும் கார்த்தியும் அஜித் வீட்டிற்கு தற்போது நேரில் சென்று அவரது தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், தந்தையை இழந்து வாடும் அஜித்துக்கு இருவரும் ஆறுதல் கூறியுள்ளனர். இருவருமே ஒரே காரில் அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்றனர். இந்த வீடியோ டிவிட்டரில் வைரலாகி வருகிறது.

அஜித்தின் தந்தை மறைவுக்கு முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, கார்த்தி ஆகியோர் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அஜித் தந்தையின் அஸ்தி சென்னை ECR கடற்கரையில் கரைக்கப்பட்டதாக அவரது அண்ணன் அனில் குமார் நேற்று ட்வீட் செய்திருந்தார். சிலர் காசிக்குச் செல்கிறார்கள்; இன்னும் சிலர் அருகிலுள்ள கரையில் அஸ்தியை கரைக்கின்றனர். 3 தலைமுறையினர் இணைந்து எங்கள் தந்தைக்கு காரியம் செய்தோம் எனக் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தந்தை உயிரிழந்த உடனே அஜித் ஒரு அறிக்கை விட்டிருந்தார். அதில், தங்களது தந்தை உயிரிழந்தது குடும்ப நிகழ்வாகவே இருக்க நினைக்கிறோம் என வேண்டுகோள் விடுத்திருந்தார். அஞ்சலி செலுத்துவதற்காக ரசிகர்கள் நேரில் வரவேண்டாம் என மறைமுகமாக கூறும் விதமாக அஜித்தின் அறிக்கை இருந்தது. இதனை புரிந்துகொண்ட ரசிகர்கள் அஜித்தின் வீட்டிற்கும் அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்துக்கும் செல்லாமல் அமைதிக்காத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் #அஜித்குமார் தந்தை மறைவன்று படப்பிடிப்பு இருந்ததால் அப்போது சிவகார்த்திகேயன் அவர்களால் அஞ்சலி செலுத்த முடியவில்லை அதனால் அப்போது அவர்க்கு பதிலாக அவர் மனைவி அஞ்சலியில் பங்கேற்றாங்க படப்பிடிப்பு முடித்து விட்டு சிவகார்த்திகேயன் நேற்று அஜித் சந்தித்து ஆறுதல் கூறிபேசிட்டு வந்தார் . இந்த தகவல் தற்போது செம்ம வைரலாகி வருகிறது

முன்னதாக சிம்பு, விஜய், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
வேலையில், அஜித் கடைசியாக தமிழில் ‘துனிவு’ படத்தில் நடித்தார். அவர் இப்போது மகிழ் திருமேனி இயக்குவதாகக் கூறப்படும் ‘ஏகே 62’ என்ற தனது அடுத்த தற்காலிகத் திட்டத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்