Friday, April 19, 2024 10:03 pm

தனது தந்தை இறந்த துக்கத்தில் அஜித் செய்த அந்த ஒரு விஷயம் ! பார்த்திபன் புகழாரம்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜித்குமாரின் தந்தை இன்று காலமானதையடுத்து, அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில் மதியம் 12 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. சோகத்தில் மூழ்கிய அஜித் தனது உறவினர்களுடன் சேர்ந்து தனது தந்தை பி.சுப்ரமணியத்தின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு சென்றார். மறுபுறம் ஷாலினி அஜீத் குமார் மாமியார் மோகினியை கவனித்துக் கொண்டிருந்தார், தொடர்ந்து அவர் பக்கம் இருந்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘தல’ என்று இவரை ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் போராடி முன்னுக்கு வந்தவர் அஜித்.

இவர் 10ம் வகுப்புக்கு மேல் படிக்கவே இல்லை. இதனையடுத்து, டெக்ஸ்டைல் தொழிலில் நுழைந்தவர். நண்பர்கள் வற்புறுத்தியதால் மாடலிங்கில் நுழைந்தார். இதனையடுத்து தமிழ் சினிமாவில் ‘அமராவதி’ படம் மூலம் அறிமுகமானார்.

இதனையடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். பைக் மற்றும் கார் ஓட்டுவதில் நடிகர் அஜித் அதிக ஆர்வம் கொண்டவர். பல ரேஸ்களிலும் கலந்து கொண்டுள்ளார்.

சமீபத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் அஜித்தின் ‘துணிவு’ படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனையையும் படைத்துள்ளது.

நேற்று நடிகர் அஜித்தின் தந்தை பி. சுப்பிரமணியம் உயிரிழந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த அவர், நேற்று அதிகாலை தூக்கத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து, அவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அஜித்தின் தந்தை மறைவிற்கு, சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “தந்தையின் மறைவின் போது, நண்பர் அஜீத் உள்ளூரில் இருந்தது நல்லது. சோகத்தை புதைத்துக் கொண்டு வந்தவர்க்கு நன்றி சொன்னார்.

மயானம் செல்ல தயாரானபோது காரில் அமர்ந்தவர் என்னருகில் சோழா பொன்னுரங்கம் (அமராவதி தயாரிப்பாளர்) நிற்பதை கண்டு இறங்கி வந்து நன்றி சொல்லிச் சென்ற பண்பு அவருக்கானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பி.சுப்ரமணியத்திற்கு அவரது மனைவி மோகினி, மகன்கள் அனுப்குமார், அஜித்குமார், அனில் குமார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளனர். அவர் தனது மகன்களுக்கு அவர்களின் கனவுகளைத் தொடர நிறைய சுதந்திரம் அளித்ததாகக் கூறப்படுகிறது, மேலும் ஒவ்வொருவரும் இப்போது முதலீடு, சினிமா மற்றும் வணிகம் ஆகிய அந்தந்தத் துறைகளில் முன்னணியில் உள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்