நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். 85 வயதான சுப்பிரமணியம் கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் அஜித்தின் தந்தை உடலுக்கு அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
வயோதிகம் காரணமாக கடந்த சில நாட்களாக பி.சுப்ரமணியம் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அஜித், ஷாலினி, அனுஷ்கா மற்றும் ஆத்விக் ஆகியோர் ஈடுசெய்ய முடியாத இழப்பால் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தந்தை உடலை பெசன்ட்நகர் மின் மயானத்திற்குள் தூக்கி சென்ற அஜித்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது