நடிகர் அஜித்குமாரின் தந்தை பி சுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 85. நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் தூக்கத்தில் காலமானதாக நடிகர் மற்றும் அவரது சகோதரர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அவருக்கும் எங்கள் குடும்பத்திற்கும் பல மருத்துவ வல்லுநர்கள் வழங்கிய கவனிப்பு மற்றும் ஆதரவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், குறிப்பாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவரது பலவீனமான பக்கவாதத்தைத் தொடர்ந்து. இந்த துயரத்தின் போது நாங்கள் ஆறுதல் அடைகிறோம் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்தார் மற்றும் கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்களாக அவரது துணைவரான எங்கள் தாயின் அழியாத அன்பை அறிந்திருந்தார்.
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் இன்று அதிகாலை திடீரென உயிரிழந்தார். இவரது உடலானது பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்திற்குக் கொண்டு சொல்லப்பட்டது. கிழக்கடற்கரைச் சாலையில் இருந்த அவரது வீட்டிலிருந்தே உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
மேலும் இந்த இறுதிச்சடங்கில் அஜித்துடன் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளும் கலந்து கொண்டுள்ளனர்.இந்நிலையில், அஜித் குமார் தந்தையின் இறுதி சடங்குகள் தற்போது நடைபெற்று வருகிறது.இதில் தனது தந்தையின் உடலை மின் மயானத்திற்கு அஜித் தூக்கி செல்லும் வழியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவலையில் ஆழத்தியிருந்தது.
இப்படியான நிலையில் இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் எனப் பலரும் நேரில் வந்து இரங்கல் தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் தகனம் செய்யும் இடத்தில் நடிகர் அஜித் தனது தந்தையை இறுதியாக பார்த்துக் கொண்டிருந்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் பி சுப்பிரமணியம். இவருக்கு மோகினி என்ற மனைவியும், அனுப்குமார், அஜித்குமார், அனில் குமார் ஆகிய மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
திரையுலகினர் மற்றும் நடிகரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் நடிகருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.