தற்போது பரபரப்பாக பேசப்படும் தயாரிப்பாளர் ரவீந்திரன், சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட மகாலட்சுமிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான மகாலட்சுமி, விவாகரத்து பெற்று சீரியல்களில் பிசியாக உள்ளார். இதற்கிடையில் பல சர்ச்சைகளில் சிக்கி, தற்போது பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் மனம் உடைந்துள்ளார்.
சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை மகாலட்சுமி. சமீபத்தில், தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகிய அடுத்த நாளே இணையத்தில் பெரிய பேசு பொருளாக மாறியது.
தங்கள் திருமணத்தின் விமர்சனங்களை காதில் வாங்கால் அதற்கான விளக்கங்களையும் கொடுத்து வந்தனர். வாரத்தில் ஞாயிற்று கிழமையானால் போது கணவருடன் அவுட்டிங் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ள மகாலட்சுமி கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியும் வெளியானது.
ஆனால் மகாலட்சுமி கர்ப்பமாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திருமணமாகி 6 மாதம் கழித்து அவர்கள் வீட்டில் சாண்டி ஹோமம் பூஜையை நடத்தியிருக்கிறார்கள்.
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டி இந்த பூஜையை செய்துள்ளதாகவும் ரவீந்தர் அந்த வீடியோ பதிவில் கூறியுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் நல்ல செய்தியை சொல்லுங்க சீக்கிரம் என்று கூறிவருகிறார்கள்.
மேலும், திருமணத்திற்கு பிறகு போட்டோ ஷூட்டில் பிஸியாக இருக்கும் இந்த ஜோடி குறித்த சமீபத்திய செய்திகள் வைரலாகி வருகிறது. மகாலட்சுமியை 300க்கும் மேற்பட்ட பட்டுப் புடவைகள் மற்றும் உடல் முழுவதும் தங்க நகைகளால் அலங்கரித்துள்ளார் ரவீந்திரன். மேலும், ரவீந்திரன் தனது புதிய மனைவிக்காக தனித்துவமான வீட்டைக் கட்டியுள்ளார். வீட்டிற்குள் நீச்சல் குளம் உள்ளிட்ட பிரமாண்டங்களை அமைத்து இந்த வீட்டை வடிவமைத்துள்ள தயாரிப்பாளர் இதற்காக 75 லட்சம் வரை செலவு செய்துள்ளார். புதுமணத் தம்பதிகளுக்கான படுக்கை தங்கத்தால் செய்யப்பட்டது என்றும் கூறப்படுகிறது.