தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் முக்கியமாக பணிபுரியும் நடிகை அஞ்சலி, திரையுலகில் மிகவும் விரும்பப்படும் நட்சத்திரங்களில் ஒருவராகிவிட்டார். பாவ கதைகள், வக்கீல் சாப், பைராகி மற்றும் மச்சர்லா நியோஜகவர்கம் போன்ற படங்களின் மூலம் அவர் பார்வையாளர்களை கவர்ந்தார். அஞ்சலி தனது நடிப்புத் திறமை மற்றும் மிகச்சிறந்த ஃபேஷன் தேர்வுகளுக்காக அடிக்கடி பிரபலமாகிறார். இருப்பினும், இந்த முறை, 36 வயதான ஒரு வித்தியாசமான காரணத்திற்காக விவாதப் பொருளாக மாறியுள்ளார். அஞ்சலி தனது வாழ்க்கையில் சிறப்பு வாய்ந்த ஒருவருடன் திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அஞ்சலி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து வருகிறார்.நடிகை அஞ்சலி தற்போது 36 வயது கடந்து இருந்தாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். சில நடிகர்களுடன் அஞ்சலியை இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்து இருக்கிறது.
குறிப்பாக நடிகர் ஜெய்யுடன் காதல் மலர்ந்ததாகவும், பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாகவும் பேசினர். இது குறித்து அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
தொடர்ந்து அதே போல் பிரபல இயக்குநருடன் திருமணம் நடக்க போவதாக பேசப்பட்டது. ஆனால் அதற்கு அவர் உடனே மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில் அஞ்சலிக்கு அவர்கள் வீட்டில் மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும் அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதால், விரைவில் திருமணம் நடக்க போவதாக புதிய தகவல் பரவி வருகிறது. இருப்பிமும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
நடிகை அஞ்சலி தற்போது ராம் சரணுடன், ஷங்கர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து அவர் திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
அந்த நேரத்தில் அஞ்சலி திரையுலகைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்ததாகவும், அவருடன் விரைவில் சபதம் பரிமாறப் போவதாகவும் எடைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், திருமணத்திற்குப் பிறகு அவர் தனது நடிப்பை விட்டுவிடுவார் என்றும் ஊகிக்கப்பட்டது. பரபரப்பான வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அந்த செய்தி உண்மையற்றது மற்றும் ஆதாரமற்றது என்று அஞ்சலி பின்னர் தெளிவுபடுத்தினார்.