கோடையின் உச்சம் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் வெப்ப சலனத்தை சமாளிக்க தமிழக சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது
வழிகாட்டுதல்கள் இங்கே:
* மதியம் 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்
*குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
*உடல் உஷ்ணம், தோல் எரிச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி போன்றவற்றுக்கு மருத்துவர்களிடம் சிகிச்சை அளிக்க வேண்டும்.
* வெளியே செல்லும் போது குடை மற்றும் முழுமையாக மூடப்பட்ட பருத்தி ஆடைகளை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடும் வெப்பத்தால் ஏற்படும் மாரடைப்பு மற்றும் உயிரிழப்புகளை தினசரி பதிவேற்றம் செய்ய மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.