திருநங்கைகள் நலனுக்காக பாடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் மாநகர காவல் துறை உயர் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து திருநங்கைகள் நலனுக்கான அரசின் திட்டங்கள் குறித்து வழிகாட்டினர்.
கூட்டத்துக்கு கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் டி.எஸ்.அன்பு, பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், குற்ற வழக்குகளில் சிக்கித் தவிக்கும் திருநங்கைகளுக்கு மறுவாழ்வு வழங்குவது குறித்தும், சமூகத்திற்கான அரசின் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் போலீஸார் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக அதிகாரிகள் திருநங்கைகளுக்கான தொழில் முனைவோர் வாய்ப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.