Saturday, April 20, 2024 8:01 am

எம்ஜிஆரின் மனசாட்சியாக இருந்தவர் அஜித் ! அஜித்துக்காக கோவில் கோவிலாக சுற்றிய பிரபலம் !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் குமார் சமீபத்தில் எச்.வினோத் இயக்கிய ‘துணிவு’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைப் பதிவுசெய்து வெளிநாட்டுக் கரையில் குடும்பத்துடன் குலுங்கிக்கொண்டிருக்கிறார். லண்டனில் இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் தயாரிப்பாளர் லைகா சுபாஸ்கரன் ஆகியோருடன் அவர் வரவிருக்கும் ‘ஏகே 62’ படத்தின் கதை விவாதங்களிலும் அவர் மிகவும் ஈடுபட்டிருந்தார்.

நடிகர் அஜித்தை தமிழ் சினிமாவில் நிறைய நடிகர், நடிகைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும் என்பதை அவர்கள் பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்கள். அதைப் போன்று அஜித்தை அடுத்த எம்ஜிஆர் என்று சொல்லியவர் தான் மறைந்த காமெடி நடிகர் மயில்சாமி. அவருக்கு அஜித் மீது அதீத பாசமும், மரியாதையும் உண்டு என்று தற்போது தகவல்கள் வெளியாகின்றன.

நடிகர் மயில்சாமி மறைந்து இரண்டு வாரங்கள் ஆகியும் அவரைப் பற்றி புது புது விஷயங்கள் ஒவ்வொரு நாளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. திரை பிரபலங்கள் அவருடன் பழகிய நண்பர்கள் என அனைவரும் அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அதில் அவர்கள் சொல்லிய ஒரு தகவல் தான் மயில்சாமி ஒரு தீவிர எம்ஜிஆர் பக்தன் என்பது.

மக்கள் திலகம் எம்ஜிஆர் அடுத்து மயில்சாமி தன்னுடைய உயிராக நினைத்தது உலகநாயகன் கமலஹாசனை தான். கமலிடம் டச்சுபாயாக வேலை செய்து வந்த மயில்சாமியை மிமிக்ரி மூலமாக நடிகராக அவர் நடிக்க வைத்ததால் இன்று ஒரு பெரிய நடிகராக முன்னேறினார். இதனால் அவருக்கு கமலின் மீது அதிக பாசம் இருந்து வந்தது.

வீட்டில் நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் கமலை கலந்து கொள்ளாமல் முடிவெடுக்க மாட்டாராம் மயில்சாமி. அந்த அளவுக்கு உலகநாயகன் கமலஹாசனை எம்ஜிஆரின் இடத்தில் வைத்திருந்திருக்கிறார் இவர். அதே போல் தான் நடிகர் அஜித்குமாரை அடுத்த எம்ஜிஆர் என்று நினைத்து தான் பாசமாக பழகி வந்திருக்கிறார்.

அதேபோல் அவர் எப்போது கோவிலுக்கு சென்றாலும் அஜித் மற்றும் அவரது குடும்பத்தின் பெயரில் அர்ச்சனை செய்து விடுவாராம். தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கூட மயில்சாமி இதுவரை அர்ச்சனை செய்ததில்லையாம். அந்த அளவிற்கு அஜித் மயில்சாமிக்கு என்ன செய்தார் என்று தெரியவில்லை ஆனால் அஜித்தை அடுத்த எம்ஜிஆர் ஆக நினைத்து மனதில் வைத்திருந்திருக்கிறார் மயில்சாமி.

இதற்கிடையில், அஜித்தின் ‘ஏகே 62’ இந்திய திரைப்பட வர்த்தகத்தில் பெரும் சத்தத்தை ஏற்படுத்தி வருகிறது, வரவிருக்கும் தமிழ் திரைப்படத்தின் குறிச்சொல்லைத் தட்டுகிறது. அனிருத் இசையமைப்பாளராகவும், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆர்யா, அருள்நிதி, காஜல் அகர்வால் போன்ற முக்கிய நட்சத்திரங்களுடன் முக்கிய கதாபாத்திரங்களுக்காக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காத்திருங்கள்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்