Tuesday, April 16, 2024 11:24 am

அட்லீக்கு பயத்தை காட்டிய சன் பிக்சர்ஸ் !! நடந்தது என்ன

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

‘ஆர்ஆர்ஆர்’ நடிகர் ராம் சரண், ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, நடிகர் அல்லு அர்ஜுன் இப்படத்தில் தோன்றுவதாகத் தெரிவிக்கப்பட்டது, இருப்பினும், ‘புஷ்பா: தி ரூல்’ காரணமாக அவர் பின்வாங்கினார். ‘ஜவான்’ படத்தை அட்லி இயக்கவுள்ளார். சல்மான் கானின் ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ படத்திலும் ராம் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர் தான் இயக்குனர் அட்லி. இவர் தளபதி விஜய் நடித்த நண்பன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தில் சங்கருக்கு உதவிய இயக்குனராக பணி புரிந்திருக்கிறார். பின்னர் ராஜா ராணி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னுடைய இயக்குனர் பயணத்தை தொடங்கினார் அட்லி.

எந்த ஒரு புது முக இயக்குனர்களுக்கும் கிடைக்காத வாய்ப்பாக அட்லிக்கு அடுத்தடுத்து தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலமாக அட்லி தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனராக பார்க்கப்பட்டார். இருந்தாலும் இவருக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் எந்த படங்களும் ரிலீஸ் ஆகவில்லை.

கொரோனா லாக்டவுனுக்கு பிறகு அட்லி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கும் பணிகளை தொடங்கினார். இந்த படத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியும் இருக்கின்றனர். தற்போது அட்லிக்கு இந்த ஒரு படம் தான் கைவசம் இருக்கிறது. இந்த படத்துக்காக அவருக்கு 30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாம்.

சம்பளம் 30 கோடியாக ஆனது மட்டுமல்லாமல் குறிப்பிட்ட நான்கு ஏரியாக்களின் விநியோக உரிமையையும் அட்லிக்கு கொடுத்திருக்கிறதாம் ஜவான் படக் குழு. இதற்கு இடையில் அட்லி அடுத்து சன் பிக்சர்சுக்கு படம் பண்ண இருக்கிறார். சன் பிக்சர்ஸ் பொருத்தவரைக்கும் எவ்வளவு பெரிய இயக்குனர்களாக இருந்தாலும் அவர்களுக்கு பெரிய அளவிலான சம்பளத்தை கொடுக்க மாட்டார்கள்.

அட்லி சன் பிக்சர்ஸிடம் பாலிவுட்டில் எனக்கு 30 கோடி சம்பளம் கொடுத்து இருக்கிறார்கள். மேலும் நான்கு ஏரியாக்களின் விநியோக உரிமையும் கொடுத்திருக்கிறார்கள். எனக்கு சம்பளம் கொடுக்க ஏன் யோசிக்கிறீர்கள் என்று பேரம் பேச கடைசியில் சன் பிக்சர்ஸ் அவர் சொல்வதை எல்லாம் உண்மை என்று நம்பி 50 கோடியை சம்பளமாக தற்போது நிர்ணயத்திருக்கிறார்களாம்.

பல வருடங்களாக தமிழில் எந்த படமும் இல்லை என்றாலும் தன்னுடைய வாய் சாமர்த்தியத்தால் சட்டென 50 கோடி சம்பளம் வாங்கும் இயக்குனராக மாறிவிட்டார் அட்லி. அதாவது தற்போது தமிழ் சினிமாவில் இவர்தான் 50 கோடி சம்பளம் இயக்குனர் . அவருடைய குருவான இயக்குனர் சங்கருக்கு 50 கோடி சம்பளம் இதுவரை எந்த படத்திற்கும் கொடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 30 ஆம் தேதி அட்லீ மற்றும் பிரியா ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர். ட்விட்டர் கேள்வி பதில் அமர்வில், ஷாருக்கான், அட்லீயின் குழந்தையை தான் சந்தித்ததாகவும், ஆண் குழந்தை இனிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாக கூறினார். அட்லியும் பிரியாவும் விரைவில் பெற்றோராகப் போவதாக டிசம்பர் மாதம் அறிவித்தனர். தம்பதியினர் தங்கள் குழந்தையின் பெயரை இன்னும் அறிவிக்கவில்லை.

- Advertisement -

சமீபத்திய கதைகள்