Thursday, March 28, 2024 2:49 pm

தமிழகத்தில் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற 6 அகதிகள் கைது

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாகத் தப்பிச் செல்ல திட்டமிட்டதாகக் கூறப்படும் ஆறு அகதிகள் ‘கியூ’ பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர். வேளாங்கண்ணியில் உள்ள தங்கும் விடுதியில் நடத்திய சோதனையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அகதிகள் கனுஜன் (34), ஜெனிபர்ராஜ் (23), தினேஷ் (18), புவனேஸ்வரி (40), துஷ்யந்தன் (36), மற்றும் சதீஸ்வரன் (32) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விசாரணையில், தமிழகம் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான சட்டவிரோத விசைப் படகில் இலங்கைக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இவர்கள் கடந்த சில நாட்களாக முகாமிட்டு விட்டு வேளாங்கண்ணியில் அறை எடுத்து தங்கி இருப்பது தெரியவந்தது. இலங்கை செல்ல செல்வத்திடம் ரூ.17 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, சட்டவிரோத படகில் தப்பிச் செல்ல செலுத்திய ரூ.17 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் விவரம் அறிய நாகைப்பட்டினம் கியூ பிரிவு போலீசார் 6 அகதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் விசாரணை நடந்து வருகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்