AK62 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அஜித்குமார் பைக்கில் பயணம் செய்யவுள்ளார். மோட்டார் சைக்கிளில் தனது உலக சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டத்தை முடித்த பிறகு அஜித்குமார் தனது வரவிருக்கும் படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது. இப்போது நடிகரின் செய்தித் தொடர்பாளர் பகிர்ந்துள்ள சமீபத்திய புதுப்பிப்பின்படி, அஜித் முதலில் படப்பிடிப்பை முடிப்பார். AK62 லைகா புரொடக்ஷன்ஸ் மூலம் ஆதரிக்கப்படுகிறது.
இன்றைய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். கடைசியாக இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் இவர் நடித்து வெளியான ”துணிவு” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றி படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து ”ஏகே 62” என அழைக்கப்படும் பெயரிடப்படாத இவரது அடுத்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனை மகிழ் திருமேனி இயக்குகிறார். இன்று டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் அஜித். மற்ற ஹீரோக்களை காட்டிலும் அனைத்து வகைகளிலும் வேறுபட்டு காணப்படுகிறார்.
மற்ற நடிகர்களின் காணப்படும் எந்த சாயலும் இவரிடம் காணப்பட இயலாது. அனைத்தையும் தவிர்க்கக்கூடிய ஹீரோவாக உள்ளார். குறிப்பாக படங்களுக்கான விருது வழங்கும் விழாவை தவிர்ப்பது மற்றும் பொது நிகழ்ச்சிகளை தவிர்ப்பது என்று பல வருடங்களாக அனைத்தையும் தவிர்த்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் தனது சொந்தப் படத்தின் பூஜை முதல் ப்ரமோஷன் வரை என அனைத்தயும் தவிர்த்து வருகிறார். மற்ற நடிகர்களை போல் சொத்துக்கள் வாங்கி குவிப்பதிலலும் ஆர்வம் காட்டுவதில்லை. இப்படி வளர்ந்த ஒரு நடிகர் மற்ற நடிகர்களை காட்டிலும் வேறுபட்டு இன்று முன்னணி நடிகராக காணப்படுகிறார் என்றால் அதற்கு இரு காரணங்கள் உண்டு.
ஒன்று அவரின் ரசிகர்களின் ஆதரவு. ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமாவில் அதிக ஃபிளாப் படங்களை கொடுத்தவர் அஜித். தமிழ் சினிமாவில்”நான் கொடுத்த ஃபிளாப் படங்களை வேறு எந்த நடிகர் கொடுத்திருந்தாலும் இந்நேரத்திற்கு காணாமல் போய் இருப்பார் ”என்று அஜித்தே கூறியிருக்கிறார். அப்படி அவரின் படங்கள் ஓடினாலும் ஓடாவிட்டாலும் ஆரம்ப காலங்களில் அவருக்கு பட வாய்ப்பு இல்லாத போதிலும் அவருக்கு உறுதுணையாக நின்று தொடர்ந்து ஆதரவு அளித்தவர்கள் அவரின் ரசிகர்கள்.
ஒரு கட்டத்தில் ரசிகர் மன்றத்தை களைத்த போதிலும் அவரின் ரசிகர் பட்டாளம் இன்னும் அதிகமாக படையெடுக்க செய்தது. இப்படி ரசிகர்கள் ஆதரவு தொடர்ந்து கிடைக்க ஒரு காரணமாக அமைந்தாலும் மற்றொன்று அவரின் தன்னம்பிக்கை. இன்று அவரை புகழின் உச்சிக்கே கொண்டு செல்ல ஒரு காரணமாக உள்ளது. இந்த இரண்டும் சேர்ந்துதான் அஜித்தை தொடர்ந்து முன்னணியில் நிலைத்து நிற்க முக்கிய காரணமாக விளங்குகிறது.
அஜித்தின் சமீபத்திய தோற்றம் எச் வினோத்தின் திருட்டு திரைப்படமான துணிவு, இது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நிறைய பாராட்டுகளைப் பெற்றது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் படம் நன்றாகவே இருந்தது. துனிவு படப்பிடிப்பு முழுவதும், நடிகர் ஐரோப்பா, இந்தியா மற்றும் தாய்லாந்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்தார். மேலும், அதே சுற்றுப்பயணத்தின் போது, மஞ்சு வாரியர், அஜித் குமார் மற்றும் அவரது குழுவினருடன் கடைசியாக லே-லடாக் மற்றும் காஷ்மீர் வரை பைக் பயணத்தில் சென்றார்.