Thursday, April 25, 2024 2:21 pm

இணையத்தில் வைரலாகும் ஜெயிலர் படத்தின் கதை இதுவா ! மெர்சலா இருக்கே

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.சிம்புவின் வேட்டை மன்னன் படத்தை முதல்முறையாக இயக்கினார் நெல்சன் தீலிப்குமார். ஆனால் அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. இதனையடுத்து பல வருடங்களுக்கு நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கினார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அத்தோடு முதல் இரண்டு படம் மெகா ஹிட் கொடுத்தால் மூன்றாவது படம் பெரிய ஹீரோவிடம் கமிட்டாகலாம் என்ற விதியின்படி அடுத்ததாக விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார். பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் பெரும் விமர்சனங்களை சந்தித்தது. இதனால் நெல்சன் தரப்பு பெரும் அப்செட்டானது.

இதற்கிடையே பீஸ்ட் பட வேலைகள் நடந்துகொண்டிருந்தபோதே ரஜினி படத்தை இயக்குவதற்கு கமிட்டானார் நெல்சன். படத்துக்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளது. மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் படத்தில் நடிக்கின்றனர். முத்துவேல் பாண்டியன் என்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் தமிழ்நாடு, நேபாளம், மங்களூரு என பல இடங்களில் விறுவிறுப்பாக் நடந்துவருகிறது. தர்பார், அண்ணாத்த ஆகிய இரண்டு படங்களும் ரஜினிக்கு தோல்வியை கொடுத்திருப்பதால் இந்தப் படத்தின் மீது ரஜினியும், அவரது ரசிகர்களும் பெரும் நம்பிக்கை வைத்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதாவது ஒரே நாளின் இரவில் நடக்கும் சம்பவங்கள்தான் ஜெயிலர் படத்தின் கதை என கூறப்படுகிறது.அத்தோடு அந்த இரவில் நடக்கும் பல சம்பவங்களை நெல்சன் திலீப்குமார் கச்சிதமாக இணைத்திருக்கிறார் எனவும் திரைக்கதை மிகவும் அருமையாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கி மெகா ஹிட்டான கைதி படத்திலும் ஒரே இரவில் நடக்கும் சம்பவங்கள்தான் கதைக்களமாக இருக்கும். அதனை மிக நேர்த்தியாக திரைக்கதைக்குள் கொண்டு வந்திருப்பார் லோகேஷ்.மேலும் ஒருவேளை ஜெயிலர் படமும் ஒரு இரவில் நடக்கும் கதையாக இருக்கும்பட்சத்தில் கைதி ஃபார்முலாவை ஜெயிலர் ஃபாலோ செய்கிறார் என்றே எடுத்துக்கொள்ளப்படும் என பலர் தெரிவித்துஇருக்கின்றனர். அதேசமயம் நெல்சன் திலீப்குமார் திறமையான இயக்குநர் என்பதால் தனது பாணியில் புதுமையாக ஜெயிலர் கதையை சொல்லியிருப்பார் என்ற நம்பிக்கையும் இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்