Monday, April 15, 2024 3:07 am

துரோகத்தின் வெளிப்பாடு தான் அஜித்தின் தற்போதைய நிலை பற்றி கூறிய பிரபலம் !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் அஜித் தனக்கென தனி பாதையை உருவாக்கி அதில் பயணித்து வருகின்றார். தன் ரசிகர்கள் தனக்காக நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பதை விரும்பாத அஜித் ரசிகர் மன்றங்களை கலைத்தார். எந்த ஒரு நடிகரும் செய்யாத காரியத்தை அஜித் துணிச்சலாக செய்தார்.

இது அவரின் மீதான மரியாதையை பலமடங்கு உயர்த்தியது. இதைத்தொடர்ந்து தன்னை தல என அழைக்கவேண்டாம் அஜித் என்று அழைத்தாள் போதும் என அறிக்கை விட்டார். இதுபோல விழாக்கள், பொதுமேடைகள் என அனைத்து நிகழ்ச்சிகளிலும் இருந்து முழுவதுமாக விலகி தான் உண்டு தான் வேலை உண்டு என இருந்து வருகின்றார் .

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் AK62 படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து சமீபத்தில் அஜித் பற்றி பேசியது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.

அவர் கூறியதாவது, ஆசை படத்தின் போதே அஜித்தும் நானும் நல்ல நண்பர்களாக பழகினோம். அப்படத்தின் படப்பிடிப்பின் போது அஜித் பைக்கில் தான் வருவார். அவரும் நானும் பைக்கில் பல முறை ஒன்றாக சென்றுள்ளோம்.

ஆசை படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய பிறகு வாலி படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றினேன். அந்த சமயத்தில் தான் என் மகனை நான் பள்ளியில் சேர்த்தேன். பள்ளியில் இடம் கிடைத்தும் என்னால் என் மகனின் பீஸை கட்டமுடியவில்லை. உடனே நான் அஜித்திடம் இந்த விஷயத்தை சொன்னேன்.

அவர் தான் என் மகனுக்கு பீஸ் காட்டினார். அதுமட்டுமல்லாமல் பத்தாம் வகுப்பு வரை என் மகனுக்கு அனைத்து பீஸையும் அஜித் தான் காட்டினார். இந்த உதவியெல்லாம் நான் மறக்கவே மாட்டேன். ஆனால் தற்போது அஜித் மிகவும் மாறிவிட்டார்.

சினிமா துறையில் சந்தித்த துரோகங்கள் காரணமாக ஜாலியாக இருந்த அஜித் தற்போது மிகவும் இறுக்கமாக மாறிவிட்டார். இருப்பினும் வெளியில் தெரியாமல் பல உதவிகளை அஜித் செய்து வருகின்றார் என மாரிமுத்து கூறியதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்