திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மக்களை வலியுறுத்தினார்.
திரிபுராவில் 60 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு தொடங்கியது.
“திரிபுரா மக்கள் சாதனை எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும்” என்று மோடி ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
“இளைஞர்கள் தங்கள் உரிமையைப் பயன்படுத்திக்கொள்ள நான் குறிப்பாக அழைக்கிறேன்,” என்று அவர் கூறினார். மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
Urging the people of Tripura to vote in record numbers and strengthen the festival of democracy. I specially call upon the youth to exercise their franchise.
— Narendra Modi (@narendramodi) February 16, 2023