மகிழ் திருமேனி ‘அஜித் 62’ படத்தை இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது, படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாகச நடிகர் பைக்கில் உலக சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளதால் அஜித் தனது 62வது படத்திற்கான வேலைகளை முடித்துவிட்டு ஓய்வு எடுக்கவுள்ளார்.
இதோ அந்த பேட்டி:”கணக்கன்பட்டி சற்குரு ஐயாவின் தீவிர பக்தன், அவருக்கா சேவை செய்தவன். அவரிடமிருந்து வந்து 22 ஆண்டுகள் ஆகிறது. நான் தல அஜித் ரசிகன் என்று சொல்ல முடியாது, நான் இறைவனின் பிள்ளை. என் மகன், தல ரசிகர். என்னுடைய மகன் அவருடைய தீவிர ரசிகன்.
கணக்கன்பட்டியில் இருந்த மெயின் ரோட்டிற்கு நான் வந்து விட்டேன். கோம்பைப்பட்டி ஈஸ்வரன் அண்ணன் தோட்டத்திற்கு அஜித் ஐயா வந்தார். நான் வந்த இடத்திற்கும் கோம்பைப்பட்டிக்கும் 7 கிலோ மீட்டர் இருக்கும்.
ஒடுவன்குறிச்சியில் இருந்து எனக்கு போன் வந்தது. நான் நாகர்கோவிலில் இருந்து வந்த பெரியவரை அழைத்து வருவதற்காக வந்திருந்தேன். ‘அஜித் வந்திருக்கார், அவர் வந்து அரை மணி நேரம் ஆச்சாம், நீங்க போய் பாருங்க’ என்று அழைப்பு வந்தது.
அந்த பெரியவர் வர கொஞ்சம் கால தாமதம் ஆகிவிட்டது. அந்த ஐயாவை அழைத்துக் கொண்டு போக ஆட்டோவிற்காக காத்திருந்தேன். அரை மணி நேரம் ஆகிவிட்டது. இனி வேலைக்கு ஆகாது என்பதால் ஏதாவது ஒரு டூவிலரில் போகலாம் என முடிவு செய்தோம். டூவீலரில் லிப்ட் வாங்கி போய் கொண்டிருந்தோம்.
அஜித் வந்தது தெரிந்து, நிறைய பைக்குகள் அங்கு படையெடுத்துக் கொண்டிருந்தன. என்னை அடையாளம் கண்ட ரசிகர்கள் சிலர், ‘நீங்க சாமி கூட இருப்பவர் தானே, தல கூட போட்டோ எடுக்கனும், கை கொடுக்கனும் கொஞ்சம் உதவி பண்ணுங்க’ என, ரன்னிங்கில் கோரிக்கை வைத்தனர்.
‘வாங்க பார்க்கலாம்’ என அவர்களுடன் நானும் சென்று கொண்டிருந்தேன். பார்த்தால், எதிரில் அவரது கார் சென்று கொண்டிருக்கிறது. சரி, நேரடியாக அவரை பார்க்க முடியவில்லை. சரி, அவரும் நம்மை மாதிரி ஒரு உழைப்பாளி. சினிமாவில் , பத்திரிக்கையில் வருவதால் அவர் பிரபலம். அவரும் நம்மை மாதிரி ஒரு மனிதன் தான்.
இறைவன் தான் நமக்கு பெரியவன். அஜித் ஐயாவும் ஆன்மிக வழியில் தான் போறாரு. கணக்கன்பட்டி ஐயாவை தேடி கோம்பை பட்டிக்கு சும்மா வந்திருக்கமாட்டார். பெரிய பெரிய மந்திரவாதிகளை அவரால் நாடி போயிருக்க முடியும். ஆனால், அவர் இங்கு வருகிறார் என்றால் அது சாதாரண விசயம் அல்ல. அஜித் ஐயா வளர்ச்சிக்கு கணக்கன்பட்டி படி உதவியிருக்கிறது,”என்று கோவிந்தராஜன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக மகிழ் திருமேனி சமீபத்தில் ‘அஜித் 62’ படத்தை இயக்கினார். சூப்பர் ஸ்டார் தற்போது ஸ்காட்லாந்தில் ‘அஜித் 62’ படப்பிடிப்பில் இருக்கிறார், மேலும் விக்னேஷ் சிவன் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.