ணிவு ஆகியவை அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் OTT வெளியீடுகள், நெட்ஃபிக்ஸ் அஜித் குமார் சமீபத்திய திரைப்படத்தின் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கைத் தொடங்கியது. வலிமை மற்றும் நேர்கொண்ட பார்வைக்குப் பிறகு எச்.வினோத் எழுதி இயக்கிய தமிழ் ஆக்ஷன் ஹீஸ்ட் திரைப்படம், பேனரின் பேனரில் LLP/Zee ஸ்டுடியோவின் கீழ் போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித் குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், அஜய், வீரா, ஜி.எம்.சுந்தர் , பிரேம் குமார் இப்படத்தின் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் மூலம் அஜித்தின் திரை வாழ்க்கையில் மற்றொரு புதிய சாதனையும் நிகழ்ந்துள்ளது. ஆம், துணிவு படத்தின் மூலம் ரூ. 110 கோடி வரை ஷேர் கிடைத்துள்ளதாம்.இதன்முலம் முதல் முறையாக ரூ. 100 கோடியை கடந்து ஷேர் கொடுத்த படம் என்ற சாதனையையும் துணிவு செய்துள்ளது.தொடர்ந்து பல சாதனைகளை புரிந்து வரும் துணிவு விரைவில் ரூ. 300 கோடியை எட்டும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.
பொங்கலுக்கு திரையில் மோதி கொண்ட அஜித், விஜய் இருவரும் இப்போது அவர்களது அடுத்த படத்தில் நடிப்பதற்கு தீவிரம் காட்டிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அடங்கிய ப்ரோமோ வீடியோவில் விஜய் மிரட்டிவிட்டிருப்பார்.
இதனால் அந்தப் ப்ரோமோவை பார்த்த பிறகு அஜித்தின் அடுத்த படம் எந்த அளவிற்கு தரமாக இருக்க வேண்டும் என்பது பெரிய போராட்டமாய் இருக்கிறது. அதிலும் பத்தாது ஏகே 62 படத்தின் இயக்குனராக சொல்லப்பட்ட விக்னேஷ் சிவன், அந்தப் படத்தில் இருந்து விலக்கப்பட்டிருக்கிறார்.
இதனால் அடுத்த இயக்குனர் யார் என்பது பற்றியும், ஏகே 62 படத்தை குறித்த முழு அப்டேட்டும் லண்டனில் இருந்து வெளி வருகிறது. கிட்டத்தட்ட இயக்குனர் மகிழ் திருமேனி தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்பது முடிவாகிவிட்டது.
மகிழ் திருமேனிக்கு லண்டனுக்கு டிக்கெட் போட்டாச்சு. அவர் கூடிய விரைவில் கிளம்ப இருக்கிறார். லண்டனில் இவர்கள் முக்கியமான மீட்டிங் நடத்த போகிறார்கள். அது முடிந்தவுடன் வெளிவரப் போகும் இவர்கள் எடுத்துக் கொண்ட போட்டோ தான் கிட்டத்தட்ட அந்த செய்தியை 100% உறுதிப்படுத்தும்.
அஜித், மகிழ் திருமேனி, லைக்கா புரொடக்சன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகளான தமிழ் குமரன் மற்றும் சுபாஸ்கரன் ஆகிய நான்கு பேரும் மீட் பண்ண போகிறார்கள். கூடிய விரைவில் இந்த நான்கு பேர் அடங்கிய புகைப்படம் லண்டனில் இருந்து வெளியாகி ஏகே 62 படத்தின் கூட்டணியை உறுதி செய்யப் போகிறது.
என்னதான் இதைப்பற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் AK62 வாய்ப்பு விக்னேஷ் சிவனை விட்டு நழுவியது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் அடுத்ததாக நானும் ரவுடி தான் படத்தை போல ஒரு காமெடி கதையை எழுதி வருகிறாராம். அப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தே தீருவேன் என்ற முனைப்பில் இருக்கிறாராம் விக்னேஷ் சிவன் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது இந்த 3 பேரும் லண்டனுக்கு கிளம்பி போய் ஏகே 62 படத்தின் அப்டேட்டை உறுதிப்படுத்தப் போகின்றனர்.இந்நிலையில் ஏகே 62 படத்தின் அப்டேட் ஆனது இந்த வாரத்தில் கண்டிப்பாக வெளிவரும் எனவும் .இன்றோ நாளையோ அதிகாரப்பூர்வ அறிவுப்பு வெளிவரும் என அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது .
ஏகே 62 (தற்காலிக தலைப்பு) என்பது நடிகர் அஜித்தின் 62வது படமாகும், இது லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ் இயக்குனர் விக்னேஷ் சிவன் முதலில் இந்த திட்டத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார், ஆனால் குழுவிற்கு நன்கு தெரிந்த காரணங்களுக்காக, அவர் இனி திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை. விக்னேஷ் சிவனுடன், இசையமைப்பாளர் அனிருத்தும் ஏகே 62 க்கு இசையமைப்பதில் முன்னணியில் இருப்பவர் சந்தோஷ் நாராயணன் என தகவல் வெளிவந்துள்ளது
இயக்குனர் மகிழ் திருமேனியின் பெயரும் AK 62 உடன் இணைக்கப்பட்டுள்ளது, ஆனால் திட்டத்தின் புதிய இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இந்த வாரத்தில் கண்டிப்பாக வெளிவரும் எனவும் .இன்றோ நாளையோ அதிகாரப்பூர்வ அறிவுப்பு வெளிவரும் என அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது .