மொழிவழி சிறுபான்மையினர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழித் தாள் எழுதுவதில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
10 ஆம் வகுப்பு வாரியத் தேர்வில் தமிழ் மொழித் தாளில் கலந்து கொள்வதில் இருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வழிகாட்டுதல்களை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் செப்டம்பர் 2019 உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது.
“இதை நாம் துண்டு துண்டாக செய்ய முடியாது. அதை நாம் கேட்க வேண்டும். உங்களுக்கு சில இடைக்கால ஏற்பாடுகள் உள்ளன… நீங்கள் அதை ஓராண்டுக்கு தொடருங்கள்” என்று நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, ஜூலை 11-ம் தேதி தொடங்கும் வாரத்தில் இந்த வழக்கை விசாரணைக்கு அனுப்பியது.