மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள பேஷன் ஷோ ஒன்றில் சனிக்கிழமை காலை வெடிகுண்டு வெடித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இம்பால் கிழக்கு மாவட்டத்தின் ஹப்தா கங்ஜெய்புங் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இம்பால் கிழக்கு எஸ்பி மகாராபம் பிரதீப் சிங் கூறுகையில், சனிக்கிழமை காலை 6.00 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.
“எந்தவொரு உயிர்சேதமும் இல்லை. இது சீன கையெறி குண்டு போன்ற வெடிக்கும் கருவியாக இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம், இது மைதானத்தின் நடுவில் வெடித்தது,” என்று அவர் கூறினார். இதற்கிடையில், பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து, குற்றவாளியை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.