2019ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை லெத்போராவில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
புல்வாமாவில் உள்ள லெத்போரா என்ற இடத்தில் யாத்திரையை சிறிது நேரம் நிறுத்திய அவர், தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட இடத்தில் மலர்க்கொத்து வைத்தார்.
அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள செர்சூ கிராமத்தில் இருந்து ராகுல் காந்தி யாத்திரையை மீண்டும் தொடங்கினார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை ஜனவரி 30 ஆம் தேதி ஸ்ரீநகரில் முடிவடைகிறது, அங்கு ராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து பொதுப் பேரணியில் உரையாற்றுகிறார்.