தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
சமீபகாலமாக சினிமாவில் போதிய வரவேற்பு இல்லாமல் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்து வந்ததால் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. சமீபத்தில் நடிகர் விஜய் – கீர்த்தி சுரேஷ் பற்றிய விவகாரம் இணையத்தில் தீயாய் பரவி அதிர்ச்சியை கொடுத்து வந்தது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பத்திரிக்கையாளர் பிஸ்மி ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். கீர்த்தி சுரேஷின் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் தன்னிடம் கீர்த்தி சுரேஷின் காதல் பற்றி கூறியிருந்தார்.
13 வருட காதல்
பள்ளிபருவ காலத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ், ஒருவரை 13 வருடமாக காதலித்து வருவதாகவும் அவருடன் திருமணம் செய்ய இரு வீட்டாலும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார். பல இடங்களில் ரிசார்ட் வைத்திருக்கும் நபர் தான் கீர்த்தி சுரேஷின் காதலராம்.
மேலும், இதை கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய்யிடம் அறிமுகப்படுத்தியும் இருக்கிறாராம். இதன்பின் விஜய் கீர்த்தி சுரேஷின் காதலரின் பிறந்தநாளுக்கு கூட வாழ்த்தும் தெரிவித்து இருக்கிறாராம். அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அந்த நபர் என்னிடம் காட்டியுள்ளார் என்று பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.
எப்போது கல்யாணம் என்று கேட்டதற்கு இப்போது கிடையாது என்றும் 4 வருடம் கழித்து தான் திருமணம் செய்யவுள்ளார் கீர்த்தி சுரேஷ் என்று தெரிவித்துள்ளார்.