நாடு முழுவதும் குடியரசு தினம் வரும் 26-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை சாலையில் இன்று அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. முப்படை வீரர்கள், தேசிய கேடட் கார்ப்ஸ், மத்திய தொழில் பாதுகாப்பு படை, காவல் துறையினர் பயிற்சியில் கலந்துகொண்டனர். அலங்கார வாகனங்களும் இடம் பெற்றிருந்தன.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசு தினத்தன்று பள்ளி மாணவர்களின் கலாச்சார நிகழ்ச்சி நடைபெற உள்ளது. குடியரசு தின விழாவில் தமிழக அரசின் 20 துறைகளை சேர்ந்த அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே வழக்கமாக நடைபெறும் ஆர்-டே விழா, மெட்ரோ ரயில் பணி வழக்கமான இடத்தில் நடைபெற்று வருவதால், உழைப்பாளர் சிலை அருகே நடைபெறும்.