Monday, April 22, 2024 8:24 am

ஏழு நாட்களில் வாரிசு வசூல் ரூ 210 கோடி என்பது சுத்த பொய் !!திருப்பூர் சுப்பிரமணியம் ஒரே போடு

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வம்ஷி பைடிபள்ளி இயக்கிய ‘வரிசு’ நகைச்சுவை, ஆக்‌ஷன் மற்றும் செண்டிமெண்ட் நிறைந்த ஒரு பொழுதுபோக்குப் படமாக இருக்கும். சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ் ராஜ் மற்றும் ஷாம் போன்ற வல்லுநர்கள் படத்திற்கு வலு சேர்க்கும் போது விஜய் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக ஒரு விரிவான நடிப்பை வழங்கியுள்ளார். குழு சமீபத்தில் பத்திரிகை மற்றும் ஊடகங்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தது, மேலும் அவர்கள் ஒரு வாரம் கழித்து ரசிகர்களை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாரிசு படம் வெளியான 7 நாட்களில் உலக அளவில் 210 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக படத்தின் தமிழக வினியோகஸ்தர் லலித் டுவிட்டரில் அறிவித்துள்ள நிலையில், திருப்பூர் சுப்பிரமணியம் 200 சதவீதம் வாய்ப்பே இல்லை என்று கூறி உள்ளார்.

வாரிசு படம் வெளியாகி டி.வி சீரியல் போல இருப்பதாக எழுந்த விமர்சனத்தால் கொதித்துப்போன இயக்குனர் வம்சிபைடிபல்லி, வாரிசு படத்துக்காக தானும் , தளபதி விஜய்யும் செய்த தியாகங்கள் என்ன தெரியுமா ? என்னப்பா இது சீரியல்ங்றாங்க… சீரியல்ன்னா கேவலமா ? மாலை நேரங்களில் வீட்டில் போய் பாருங்க உங்க மாமா, பாட்டி எல்லாம் வீட்டில் பார்க்கிறார்கள் . டி கிரேடி பண்ணாதீங்க, சீரியலை சாதாரணமா நினைக்காதீங்கன்னு பொங்கியதால் டிவிட்டரில் டிரெண்டாகி வருகின்றார்

இதற்கிடையே வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜிடம் இருந்து குறிப்பிட்ட தொகைக்கு தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கிய தயாரிப்பாளர் லலித் என்பவர் 5 நாட்களில் வாரிசு படத்தின் வசூல் 150 கோடியை தாண்டியதாக விளம்பரம் வெளியிட்ட நிலையில், 7 நாட்களில் 210 கோடியை தாண்டியதாக விளம்பரம் வெளியிட்டு விஜய் ரசிகர்களையே இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார்.

எப்போதும் விஜய் படத்திற்கு முதல் நாள் வசூல் தான் அதிகமாக இருக்கும். வாரிசு திரைப்படத்தை பொறுத்தவரை 6 மற்றும் 7 வது நாள் வசூல் அதிகரித்து இருப்பதாக விளம்பரம் வெளியிட்டு இருப்பது திரை உலகினரையே பிரமிக்க வைத்துள்ளது

இது தொடர்பாக பிரபல வினியோகஸ்தரும் , தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியத்திடம் கேட்ட போது 200 சதவீதம் வாய்ப்பில்லை என்றார். லலித் வாங்கியது தமிழக உரிமை மட்டுமே, அதிலும் 5 முக்கிய ஏரியாக்களை ரெட் ஜெயண்டிடம் கொடுத்து விட்டார்.

மீதம் உள்ள ஏரியாக்கள் விவரம் மட்டுமே லலித்துக்கு தெரியவரலாம். அதுவும் உடனடியாக எல்லாம் தெரியாது. வெளி நாட்டு உரிமையை வேறு ஒருவர் வாங்கிச்சென்று விட்டார். அப்படி இருக்க இவருக்கு எப்படி 7 நாட்களில் உலக அளவிலான, முழுமையான வசூல் நிலவரம் தெரியவந்தது ? என்று கேள்வி எழுப்பினார்.

சிங்கிள் ரீலீஸ் என்றால் கூட பரவாயில்லை, போட்டிக்கு துணிவு படம் வந்து அதுவும் நல்லா போயிட்டு இருக்கு, இவர்கள் சொல்கிற அளவுக்கு எல்லாம் திரையரங்கு வசூல் சாத்தியமில்லை..! என்று அழுத்தமாக தெரிவித்த திருப்பூர் சுப்பிரமணியம், லலித் இந்த அளவுக்கு வசூல் விளம்பரம் வெளியிட ஒரே ஒரு காரணம் தான், விஜய்யோட அடுத்த படத்தை லலித்தான் தயாரிக்கிறார் அதான் வியாபார கணக்கு என்றார்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் ‘வரிசு’ வெளியாகி, பாக்ஸ் ஆபிஸில் அஜித்தின் ‘துணிவு’ படத்துடன் மோதுவதற்காக கடந்த வாரம் ஜனவரி 11-ம் தேதி நடுப்பகுதியில் படம் தொடங்கப்பட்டது.வரிசு என்பது வம்ஷி பைடிபள்ளி எழுதி இயக்கியுள்ள ஒரு எமோஷனல் ஃபேமிலி என்டர்டெய்னர். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். இப்படத்தில் விஜய் தவிர, ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, ஜெயசுதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த் மேகா மற்றும் ஷாம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் எஸ் தமன் இசையமைத்தார் மற்றும் பெரும்பாலான பாடல்கள் சார்ட்பஸ்டர்களாக இருந்தன.

- Advertisement -

சமீபத்திய கதைகள்