விஜய் நடித்த ‘வாரிசு ’ திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, வெளியான முதல் நாளில் ரூ.20 கோடி வசூல் செய்துள்ளது. வம்ஷி பைடிபள்ளி இயக்கியிருக்கும் இந்தப் படம் குடும்பப் படம், இதில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழகத்தின் ஒரு மாவட்டத்தில் தளபதி வாரிசு பட ஷோ ஆள் இல்லாமல் ரத்தான செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கரூரை அடுத்த அரவக்குறிச்சியில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.
அப்படத்திற்கான அதிகாலை 1 மணி மற்றும் 4 மணிக் காட்சிகள் ஹவுஸ்புல் ஆக இருந்தது, ஆனால் அடுத்ததாக திரையிடப்பட்ட 7 மணி காட்சிக்கு மொத்தம் 17 பேர் மட்டுமே டிக்கெட் வாங்கியுள்ளனர்.
திண்டிவனம் தியேட்டரில் துணிவு படம் பார்க்க ரசிகர்கள் வரததால் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்தது இதனால் அந்த திரையரங்க நிர்வாகம் அந்த காட்சியை ரத்து செய்துள்ளனர்.
இந்நிலையில், சற்று அதிர்ச்சியளிக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அஜித்தின் துணிவு படத்தை ரசிகர்கள் பார்க்க வந்துள்ளனர்.படத்தின் இடைவேளையில் விஜய்யின் வாரிசு படத்தின் பாடல் திரையரங்கில் ஒலித்துள்ளது. இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் சிலர் தங்களுடைய செருப்பை எடுத்து திரையில் அடித்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
#BREAKING: துணிவு படத்தின் இடைவேளையில் வாரிசு படத்தின் பாடல் திரையிடப்பட்டதால் திரையை செருப்பால் அடித்த அஜீத் ரசிகர்கள். பின்பு பாடல் நிறுத்தப்பட்டது.#Varisu #Thunivu pic.twitter.com/GwAkSm4THs
— TN Theatres Association (@TNTheatres_) January 12, 2023
வம்ஷி பைடிப்பள்ளி இயக்கிய ‘வரிசு’ படத்தில் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், மேலும் நடிகர் தனது பழங்கால நாட்களை ரசிகர்களை நினைவுபடுத்தும் வகையில் உணர்ச்சிகரமான குடும்ப நாடகத்துடன் முழுமையான நடிப்பை வழங்கியுள்ளார். சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், யோகி பாபு ஆகியோர் தங்களால் இயன்ற கதாப்பாத்திரங்களைச் செய்திருக்கிறார்கள், அதே சமயம் தமனின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு மிகப் பெரிய ஊக்கத்தை அளித்துள்ளன.