Monday, April 15, 2024 7:23 am

இலங்கையில் வசூல் ருத்ர தாண்டவம் தாண்டிய துணிவு !! ஆல் டைம் ரெக்கார்ட் சாதனை படைத்த அஜித்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அதிரடி காட்சிகளால் நிரம்பிய, அஜித்தின் ‘துணிவு’ ஒரு வங்கிக் கொள்ளையைப் பற்றியது, மேலும் பிரபல நடிகர் இயக்குனர் எச் வினோத்துடன் தனது மூன்றாவது படத்தின் மூலம் ரசிகர்களுக்கு ஒரு சமூக செய்தியை அனுப்புகிறார். 2011 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் நாடகமான ‘மங்காத்தா’வில் அவரது பாத்திரத்தை ரசிகர்கள் ஒப்பிடுகையில், அஜித் ஒரு எதிர்மறையான கேரக்டரில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி மற்றும் மோகன் சுந்தரம் ஆகியோர் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர், அதே நேரத்தில் ஜிப்ரானின் இசை படத்தை மேலும் ஈர்க்கிறது.

தற்போது இளம் இயக்குனர்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு படங்களை கொடுத்து வருகிறார்கள். அதனால் அவருடைய படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜுக்கு அடுத்தபடியாக வினோத் ரசிகர்கள் விரும்பும் இயக்குனராக உள்ளார்.

சமீபத்தில் அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு படம் ரசிகர்களிடம் பாசிடிவ் கமெண்ட்களை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி வசூலையும் வாரி குவித்து வருகிறது. தொடர்ந்து மூன்று முறை அஜித் உடன் கூட்டணி போட்ட வினோத் இப்போது மற்ற நடிகரின் படத்தை இயக்க ஆர்வம் காட்டி வருகிறார்.அந்த வகையில் துணிவு ரிலீசுக்கு முன்பே யோகி பாபுவை வைத்து வினோத் ஒரு படம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஏனென்றால் தொடர்ந்து ஆக்சன் படங்களாக எடுத்து வரும் வினோத் மாறுதலுக்காக ஒரு காமெடி ஜானரில் படம் பண்ணலாம் என்று யோசித்து இருந்தார்.

ஆனால் இப்போது துணிவு வெற்றி அவரை வேற லெவலில் கொண்டு சேர்த்து உள்ளது. அதாவது வினோத் உலக நாயகன் கமல் மற்றும் தனுஷ் ஆகியோரிடம் கதை கூறியுள்ளார். ஆனால் அவர்கள் இருவருமே துணிவு படம் ரிலீசுக்கு பின்பு படத்தை பார்த்து முடிவு செய்கிறோம் என்று கூறிவிட்டனர்.

இப்போது துணிவு படத்தை பார்த்துவிட்டு கமலும், தனுஷும் உடனடியாக வினோத்துக்கு போன் செய்து எப்போது படம் பண்ணலாம் என்று ஆர்வமாக கேட்டுள்ளனர். ஆகையால் இப்போது வினோத், யோகி பாபுவின் படத்தை சில காலம் தள்ளி போடலாம் என்று முடிவெடுத்துள்ளாராம்.

மேலும் கமல் மற்றும் தனுஷ் இவர்களில் யார் முதலில் வந்து கால்ஷீட் தருகிறார்களோ அவர்களின் படத்தை முதலில் தொடங்கலாம் என்று வினோத் யோசித்துள்ளாராம். ஆகையால் விரைவில் வினோத் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். அதுமட்டுமின்றி இந்த அறிவிப்புக்காக வினோத் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.


இலங்கையில் வெளியாகி உள்ள படங்களில் அதிக வசூல் செய்து உள்ள ஒரே தமிழ் திரைப்படம் அது துணிவு திரைப்படம் தான் .இலங்கையில் மட்டுமே இந்திய காசு படி 8.1/5 கோடி க்கு மேலே வசூல் செய்து புதிய சாதனையை செய்து உள்ளது இதை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் .

- Advertisement -

சமீபத்திய கதைகள்