Sunday, April 14, 2024 5:09 pm

இரண்டாவது நாளே காற்று வாங்கும் ‘வாரிசு ‘ திரையரங்குகள்..!! தொடர்ந்து தோல்வியை நோக்கி செல்லும் விஜய்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘வரிசு’ ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாகும் . இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா கிரிஷ், சம்யுக்தா மற்றும் யோகி பாபு ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இன்று இப்படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில், விஜய் படத்தில் பணியாற்றுவது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும், ஆக்‌ஷன், எமோஷன் உள்ளிட்ட அனைத்தையும் படம் தங்களுக்கு உணர்த்துவதாகவும், குடும்பத்துடன் பார்க்க கூடிய படம் என்றும் கூறியுள்ளனர். .

விஜய் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கியுள்ள இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படம் அருமையாக வந்துள்ளது, சண்டை வேண்டுமா சண்டை இருக்கு, எமோஷன் வேண்டுமா எமோஷன் இருக்கு ரசிகர்களுக்கு என்ன வேண்டுமோ அது அனைத்தும் படத்தில் இருக்கிறது என்று தயாரிப்பாளர் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார்.

அவர் கூறியது போல் எல்லாமே இருக்கு, ஆனால், நல்லாவா இருக்கு என்று கேட்டால் அது கேள்வி குறி தான். ஆம், அதிகாலை 4 மணிக்கு தூக்கத்தை விட்டுவிட்டு, விஜய்யின் வாரிசு படத்தை பார்க்க வந்த ரசிகர்களுக்கு தாலாட்டுப்பாடி திரையரங்கில் அனைவரையும் தூங்க வைத்துள்ளார் வம்சி. ஏற்கனவே பல இயக்குனர்கள் பயன்படுத்திய அதே கதையை வைத்து கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து எடுத்துள்ளார் வம்சி.

ஹீரோ விஜய் படத்தை காப்பாற்ற நினைத்தாலும், ஹீரோயின் ராஷ்மிகா அதற்க்கு தடையாக நிற்கிறார். விஜய்யுடன் ராஷ்மிகாவிற்கும் இருக்கும் காட்சிகள் பல செம கிரிங்-ஆக அமைந்துள்ளது. யோகி பாபு, சரத்குமார், ஜெயசுதா ஒரு பக்கம் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்க மறுபக்கம் பிரகாஷ் ராஜை வில்லன் என்று கூறி டம்மி ஆக்கிவிட்டார் வம்சி.

இதே போன்று விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தை தயாரித்து AGS நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. ஆனால் நஷ்டம் அடைந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு அடுத்து ஒரு படம் கால்சீட் தருகிறேன் என விஜய் தயாரிப்பு நிறுவனத்துக்கு உறுதியளித்துள்ளார். அதை சொன்னது போன்று செய்யவில்லை என கூறப்படுகிறது. மேலும் விஜய்யை வைத்து மேலும் ஒரு படம் தயாரித்து அது நஷ்டத்தை சந்தித்தால் பெரும் சிக்கலாகிவிடும் என்பதால் தயாரிப்பு நிறுவனங்களும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர்.

இந்நிலையில் தற்பொழுது வெளியாகி படு தோல்வியை சந்தித்து , திரைக்கு வந்து ஒரே நாளில் காற்று வாங்கி கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர், இந்த படத்தில் அடைந்த நஷ்ட்டத்தை சரி செய்ய நடிகர் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கலாம் என கூறப்படுகிறது. விஜய் சம்பள தொகையை குறைத்து அவர்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு மேலும் ஒரு படத்துக்கு கால் சீட் கொடுக்க வேண்டும் என விஜய்க்கு நெருக்கடி கொடுக்கலாம் என அந்த சமயத்தில் கூறப்பட்டது

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக இருந்தாலும் திரைக்கதையில் சற்று சொதப்பியுள்ளார். மொத்தத்தில் தில்லாக பேசிய தில் ராஜுவின் தலையில் துண்டு விழுவது போல் அமைந்துள்ளது முதல் நாள் விமர்சனம். தில் ராஜு ஸ்டைலில் சொல்லவேண்டும் என்றால் ‘ஃபிளாப் வேணுமா ஃபிளாப் இருக்கு’.மொத்தத்தில் மெகா சீரியல் போன்று அமைந்துள்ள வாரிசு படத்ம் மிக நீளமாக உள்ளது, சீரியலுக்கு அடிமையாகி உள்ள இல்லத்தரசிகள் பார்க்க வேண்டிய சீரியலை ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து அதிகாலையில் பார்க்கிறோமே என்று கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுது கொண்டே தான் விஜய் ரசிகர்கள் வாரிசு படம் பார்க்கும்படி உள்ளது. இறுதியில் வாரிசு மெகா சீரியலில், மன்னிக்கவும், வாரிசு படம், இதுவரை தொலைக்கட்சிகளில் மட்டும் மெகா சீரியல் பார்த்து வந்த இல்லத்தரசிகள் திரையரங்குகளில் மெகா சீரியல் பார்த்து கண்ணீருடன் இல்லத்தரசிகள் கொண்டாடும் படமாக அமைத்துள்ளது.

இந்நிலையில் என திரையரங்கில் காத்து வாங்கும் வாரிசு படம் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது இதோ உங்கள் பார்வைக்கு

வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வரிசு’ திரைப்படம் கோலிவுட்டில் இயக்குனரின் முதல் படம். அவர் இன்று ஜனவரி 11 அன்று சென்னையில் ரசிகர்களுடன் திரைப்படத்தின் FDFS ஐப் பார்த்தார், அதன் விளைவு மற்றும் விஜய்யின் படத்திற்கு ரசிகர்கள் அளித்த பதிலில் இயக்குனர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த வம்ஷி பைடிபள்ளி, ‘வரிசு’ ஸ்கிரிப்டை சொல்லும் போது விஜய் ஒரு நிமிடம் யோசித்து, ‘வரிசு’ ஸ்கிரிப்ட்க்கு சரி என்று கூறியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. விஜய் ஒரு பெரிய நட்சத்திரம் என்றாலும், படத் தொகுப்புகளில் அவர் அப்படி நடந்துகொண்டதில்லை என்றும் இயக்குனர் கூறியதாக கூறப்படுகிறது. நடிகரைப் பாராட்டிய அவர், விஜய் எப்போதும் தொழில்முறைத் திறனைக் கடைப்பிடிப்பதாகவும், தனது காட்சிகளை கச்சிதமாக வழங்குவதாகவும் கூறினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்