தேசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக மாணவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.
3வது தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 177க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று 10 தங்கம், 27 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 67 பதக்கங்களை வென்று 5வது இடத்தைப் பிடித்தனர். ஆந்திரா, குண்டூர் மற்றும் விஜயவாடாவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கிடையேயான 3-வது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் வாழ்த்து தெரிவித்து, அரியலூர் மாவட்ட இருளர் இன பழங்குடியின மக்களுக்கு
1/2 pic.twitter.com/xvtc7vquPc— TN DIPR (@TNDIPRNEWS) January 4, 2023
ஆந்திரப் பிரதேசம், குண்டூர் மற்றும் விஜயவாடாவில் 17.12.2022 முதல் 22.12.2022 வரை நடைபெற்ற 3வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 22 மாநிலங்களைச் சேர்ந்த 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.