திரிபுராவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) ‘ஜன் விஸ்வாஸ் யாத்திரை’யை அம்மாநிலத்தில் இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
ஷா வியாழன் அன்று வடக்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள தாமநகர் மற்றும் தெற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள சப்ரூமில் இருந்து ‘ஜன் விஸ்வாஸ் யாத்திரை’யை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
திரிபுரா பாஜக மாநிலத்தில் கட்சி ஆதரவு தளத்தை வலுப்படுத்த ‘ஜன் விஸ்வாஸ் யாத்ரா’ திட்டத்தை தொடங்கவுள்ளது.
இந்த யாத்திரை மாநிலத்தின் 60 தொகுதிகளில் எட்டு நாட்கள் நடைபெறும். 2018 முதல் பாஜக அரசு செய்துள்ள வளர்ச்சிப் பணிகளை வெளிப்படுத்துவதே யாத்திரையின் முக்கிய நோக்கமாகும்.
யாத்திரையின் நிறைவு நாளான ஜனவரி 12ஆம் தேதி பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா மக்கள் மத்தியில் உரையாற்றுவார்.
திரிபுராவில் 2023ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.