Friday, March 29, 2024 1:03 am

2023ல் அமோக அதிஷ்டத்தை அள்ளி கொடுக்கும் ராசிகாரர்கள் யார் தெரியுமா?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சுக்கிரன் ஒளி பொருந்திய கிரகம் சுக்கிரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர்.

சுக்கிர பெயர்ச்சியில் எல்லாக் கிரகங்களும் அவ்வப்போது தங்கள் ராசிகளையும் நிலைகளையும் மாற்றுகின்றன.

சுக்கிரன் தனுசு ராசியில் டிசம்பர் 5ஆம் திகதி இடப்பெயர்ச்சி அடைகிறார். அஸ்தங்கமாகியிருந்த சுக்கிரன் தற்போது உதயமாகியுள்ளார்.

தனுசு ராசியில் பயணம் செய்யப்போகும் சுக்கிரனால் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிகாரர்களுக்கு நன்மையான பலன்கள் அமையுமா அல்லது தீமையான பலன்களை தருமா என பார்க்கலாம்.

சிம்மம்

2013ம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது, வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருப்பதுடன், தொழில் செழிக்கும்.

இதனால் வருமானம் அதிகரிப்பதுடன் குடும்ப கஷ்டங்கள் நீங்கும், நீண்ட நாட்கள் வரன் கிடைக்காமல் கஷ்டப்படும் நபர்களுக்கு நினைத்தபடி வாழ்க்கை அமையும்.

ஏற்கனவே திருமணமான நபர்களுக்கும் குடும்ப பிரச்சனைகள் நீங்கி தம்பதிகள் சிறப்பாக வாழ்வார்கள்.

தனுசு

தனுசு ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதனால், லக்கினாதிபதி யோகம் உருவாகிறது.

ஏற்கனவே புதனும் இருப்பதால் வாழ்வில் வெற்றி தொடங்குகிறது, வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

தொழிலில் வெற்றி கண்டு புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான சூழல் உருவாகும், பழைய சொத்தில் பிரச்சனைகள் இருந்தாலும் சரியாகும்.

திருமணம் முடிந்து நீண்ட வருடங்களாக குழந்தைப்பேறு இல்லாமல் இருப்பவர்களுக்கு நிச்சயம் குழந்தைப்பேறு கிடைக்கும்.

கன்னி

சுக்கிரனின் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கும் லக்னாதிபதி யோகம் அமைகிறது, இதனால் தொழில் விருத்தி அடைந்து பணவரவு அதிகரிக்கும்.

இந்த நேரம் கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமைவதால் வியாபாரத்தில் தாராளமாக முதலீடு செய்தால் கைமேல் நிச்சயம் பலன் உண்டு.

சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளும் சரியாகும், புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்களும், திருமணமான தம்பதிகளுக்கு வாழ்வு மகிழ்ச்சிகரமாகவும் அமையும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்