தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், பின்னர் அது மேற்கு திசையில் இலங்கையை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெற்று இலங்கை அருகே தமிழக மாவட்டக் கரையைக் கடந்து அதன் பிறகு உள்மாவட்டங்கள் வழியாக அரபிக்கடலுக்குச் செல்லும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உள் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.