பிரபல தொலைக்காட்சி சேனலில் நடிகர் ஆர்யாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் நிகழ்ச்சியாக ஆரம்பிக்கப்பட்டது எங்க வீட்டு மாப்பிள்ளை. இந்நிகழ்ச்சியில் 16 இளம் பெண் மாடல்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பல போட்டிகளை கடந்த இறுதி சுற்று வரைக்கும் வந்த மூன்று பெண்களில் ஒருவர் மலையாள பெண் சீதா லட்சுமி ஹரிகரன். மூவரில் யாரை திருமணம் செய்து கொண்டாலும் சங்கடமாக இருக்கும் எனக்கு என்று ஆர்யா அதிலிருந்து பின் வாங்கிவிட்டார்.
இதனால் சோகத்தில் இருந்த சீதாலட்சுமி நிகழ்ச்சிக்கு பின் ஆர்யா பற்றிய சில விசயங்களை பகிர்ந்தும் கொண்டார். தற்போது ஆர்யா நடிகை சாயிஷாவை திருமணம் செய்து ஒரு குழந்தையையும் பெற்றார். இதனை அடுத்து ஒருசில படங்களில் நடித்து வருகிறார் ஆர்யா.
சீதாலட்சுமி மாடலிங் துறையில் செயல்பட்டு சில நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சீதாலட்சுமி கிளாமர் ரசிகர்களை மிரட்டும் வகையில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் ஒரு பார்ட்டியில் தோழிகளுடன் கலந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.