Friday, April 19, 2024 5:06 pm

துணை நடிகையாக இருந்தும் கோடியில் ECR பங்களாவா? நடிகையை பற்றி உண்மையை கூறிய பயில்வான்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக திகழ்ந்து பின் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்து பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். அந்த சீரியல் கொடுத்த நல்ல வரவேற்பால் வெள்ளித்திரையில் மேயாதமான் படத்தில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்து நடித்தார்.

பின் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், பொம்மை, மாஃபியா, களத்தில் சந்திப்போம், ஓ மனப்பெண்ணே, ஹாஸ்டல், குறுதிஆட்டம், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

லட்சத்தில் சம்பளம்
தற்போது இந்தியன் 2, ருத்ரன், அகிலன், டிமாண்டி காலணி 2, போன்ற படங்களில் நடிக்க கமிட்டாகினாலும் அப்படங்களில் முக்கிய ரோல் இல்லாமல் தான் நடிக்கிறார். ஒருசில படங்களை தவிர பிரியா பவானி சங்கர் இரண்டாம் மூன்றாம் ஹீரோயினாகத்தான் நடித்து வந்தார். அதிலும் லட்சத்தில் தான் சம்பளம் பெற்று வந்தாராம். இதன்பின் கமிட்டாகிய படங்களை தாண்டி இனிமேல் தனக்கு முக்கியத்துவம் படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளார்.

இந்நிலையில் இப்படி லட்சத்தில் சம்பளம் வாங்கி ஈசிஆர் பகுதியில் பிரம்மாண்ட பங்களாவை வாங்கி வைத்திருந்தார். தற்போது 18 வயதில் கடற்கரைக்கு சென்று இங்கே வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறிவிட்டது. கனவோடு காலெடி எடுத்து வைக்கிறோம் என்று தன் காதலருக்கு முத்தம் கொடுத்த படி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

பயில்வான் ரங்கநாதன்
ஈசிஆர் பகுதியில் நிலமே கோடிக்கணக்கில் இருக்கும் போது லட்சத்தில் வாங்கும் ஒரு நடிகை எப்படி பங்களா வாங்கி குடிப்போக முடியும் என்று பயில்வான் ரங்கநாதன் சில மாதங்களுக்கு முன் விமர்சித்து இருந்தார். ஆனால் பிரியா பவானி சங்கர், விளம்பரப்படங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள், படங்கள் போன்றவற்றில் நடித்து அதில் வாங்கிய தொகையை சேர்த்து வைத்துதான் இதை கட்டியிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்