வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிராந்தியத்தின் தலைநகரான உரும்கியில் உள்ள உயரமான குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
உரும்கியில் உள்ள தியான்ஷான் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.
சுமார் மூன்று மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவசர சிகிச்சை பலனின்றி 10 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 9 பேரின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக, அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில், மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள துணி உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர் மற்றும் இருவர் காயமடைந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், வெல்டிங் பணியின் போது ஏற்பட்ட தீப்பொறியால், தொழிற்சாலையில் இருந்த பருத்தி துணியில் தீப்பிடித்தது.
ஆகஸ்ட் 2015 இல், தியான்ஜின் துறைமுகத்தில் 700 டன் சோடியம் சயனைடு உட்பட அதிக அளவு நச்சு இரசாயனங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதில் 170 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 700 பேர் காயமடைந்தனர்.
சீனா அடிக்கடி ஆபத்தான தீ மற்றும் தொழில்துறை விபத்துக்களை சந்திக்கிறது, இது பெரும்பாலும் அலட்சியத்தின் விளைவாகும்.