ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு ஞாயிற்றுக்கிழமை ராணுவ மருத்துவமனையில் (பரிந்துரை மற்றும் ஆராய்ச்சி) வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று ராஷ்டிரபதி பவன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
64 வயதான முர்மு, அக்டோபர் 16ஆம் தேதி ராணுவ மருத்துவமனையில் இடது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
”இந்திய ஜனாதிபதி, ஸ்ரீமதி திரௌபதி முர்மு, இன்று காலை (நவம்பர் 20, 2022) புது தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் (பரிந்துரை மற்றும் ஆராய்ச்சி) தனது வலது கண்ணின் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்,” என ராஷ்டிரபதி பவன் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக முர்மு ஜூலை 25 அன்று பதவியேற்றார்.