வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காலை வலுவிழக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம்-புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 450 கி.மீ தொலைவில் மையம் கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
இந்நிலையில், வானிலை எச்சரிக்கையை தொடர்ந்து எண்ணூர், கடலூர், தூத்துக்குடி, நாகப்பட்டினம், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை சமிக்ஞை ஏற்றப்பட்டுள்ளது.