- Advertisement -
மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் நாளை முதல் கடலுக்குச் செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆழ்கடல் மீனவர்கள் தங்கள் படகுகளை அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் அனைத்து மண்டல இணை இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்களுக்கு மீன்வளத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
ஜனவரி 18 முதல் ஜனவரி 21 வரை தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
- Advertisement -